Close
ஜூலை 28, 2026 8:04 மணி

நாமக்கல்லில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிம பெருட்களை கொண்டுசென்றால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

நாமக்கல்லில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிமப்பொருட்களை கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் கனிம வளத்தை பாதுகாத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு கருங்கற்கள், ஜல்லிகள், எம்.சேண்ட், பி.சேண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்வதற்கு, தமிழக அரசு 3 மாதத்திற்கு தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் செல்பட்டு வரும் அனைத்து கல்குவாரி உரிமையாளர்கள், எம்.சேண்ட், பி.சேண்ட் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் டிரான்ஸ்போர்ட்டர்கள் உள்ளிட்ட அனைவரும் இத்தடையை முறையாக கடைப்பிடிக்கவேண்டும்.

மேலும், இந்தத் தடையின் கீழ் கருங்கற்கள், ஜல்லிகள், எம்.சேண்ட், பி.சேண்ட் உள்ளிட்ட அனைத்து கனிமப் பொருட்களையும் தமிழ்நாட்டின் எல்லைகளை கடந்து, பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லக் கூடாது. புதுச்சேரி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டத்திற்கு இந்த தடை பொருந்தாது.

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் கனிமப் பொருட்களை பிற மாநிலங்களுக்கு அனுப்புதல், விற்பனை செய்தல், போக்குவரத்து செய்தல் அல்லது அதற்கு உடந்தையாக இருத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top