காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் 112 தீர்மானங்கள் மாமன்றத்தில் முன்வைக்கப்பட்டு 111 தீர்மானங்கள் ஏக மனதாக உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் தங்களின் பகுதி சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து மன்றத்தில் பேசினர்.
அப்போது அதிமுக மாமன்ற உறுப்பினர் குட்டி என்ற சண்முகசுந்தரம், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வனத்துறை அமைச்சரும் காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் ரஞ்சித் குமார் வெளியிட்ட வீடியோவில், காஞ்சிபுரம் புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கு மாநகராட்சி மேயர் மகாலட்சுமி அவர்களின் கணவர் யுவராஜ் என்பவர் இரண்டு கோடிக்கு மேல் பெற்றதாக புகார் தெரிவித்து அதை அதன் ஆதாரம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு தனது கண்டனத்தை தெரிவிப்பதாகவும், இது மாமன்ற உறுப்பினர்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் உள்ளது எனவும் கூறினார்
திமுக மேயருக்கு ஆதரவாகவும் தமிழக வெற்றிக்கழக அமைச்சருக்கு எதிராகவும் அதிமுக மாமன்ற உறுப்பினர் கூறியதால் கூட்டத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.




