நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகா அலுவலகங்களில் வரும் 13ம் தேதி சனிக்கிழமை ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை மேற்கொள்ளவும், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேஷன் கார்டுதாரர்களுக்கான குறைதீர் முகாம் வருகிற 13ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் இந்த முகாம் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்கள் ரேஷன் கார்டு சம்மந்தமான குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




