Close
ஏப்ரல் 23, 2026 8:16 மணி

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதி மீறி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 5.07 கோடி பறிமுதல்

நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை தேர்தல் விதிமுறைகளை மீறி வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 5 கோடியே 7 லட்சம் மதிப்பிலான பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மார்ச் 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, இரவு, பகல் 24 மணி நேரமும் போலீசார் மற்றும் அதிகாரிகள் வாகனங்களில் ரோந்து சென்று கண்காணித்து வந்தனர்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் உரிய ஆவணம் இன்று எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 50 ஆயிரத்துக்கும் மேலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு சந்மந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் விசாரணையின்போது சரியான ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.

கடந்த மார்ச் 15ம் தேதி நேற்று 22ம் தேதி வரை பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த 8,049 விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. இது சம்மந்தமாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனியார் இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 2,283 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இது குறித்த 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 84 நிகழ்வுகளில் 54 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி ரொக்கம் மற்றும் கூப்பன்களை வாகனங்களில் எடுத்துச்சென்றதாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது சம்மந்தமாக ரூ. 5 கோடியே 7 லட்சத்து 28 ஆயிரத்து 584 மதிப்புள்ள ரொக்கம் மற்றும் தங்க நகைகள், டவல்கள், பெட்ஷீட்டுகள், எவர்சில்வர் பாத்திரங்கள், அரிசி, கூப்பன்கள், மதுபானங்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்த மொத்தம் ரூ. 1 கோடியே 78 லட்சத்து 16 ஆயிரத்து 52 மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்களில், உரிய ஆவணங்களை ஒப்படைத்ததால் இதுவரை ரூ. 1 கோடியே 61 லட்சத்து 23 ஆயிரத்து 252 மதிப்புள்ளவை சம்மந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளன.

5 வழக்குகளில் ரூ. 4 லட்சத்து, 42 ஆயிரத்து 800 மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருட்கள் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ. 12 லட்சத்து 50 மதிப்பில் வருமான வரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் விசாரணையில் இருந்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top