Close
ஜூலை 25, 2026 7:12 மணி

நாமக்கல்லில் தெருநாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல்லில் நடைபெற்ற தெருநாய்களுக்கான, வெறிநோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் மதுபாலன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்லில் தெருநாய்களுக்கான மாபெரும் வெறிநோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனர், வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட ஆட்சியர்கள், தமது மாவட்டத்தில் உள்ள தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையங்களை ஒவ்வொரு வாரமும் பார்வையிட்டு ஆய்வு செய்யவேண்டும் என கூறியுள்ளார்.

இதையொட்டி, நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பார்க் ரோட்டில், தெருநாய்களுக்கான மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் முகாமில் கலந்துகொண்டு, தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, மாநகர் நல அலுவலர் கஸ்தூரி பாய், கால் நடை மருத்துவர்கள் சீனிவாசன், ராதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top