தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறுதானிய உணவகத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுவதாக எழுந்த தகவலின் பேரில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, விதியை மீறி பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, உடனடி நடவடிக்கையாக அதிகாரிகள் கடையை மூடி அபராதம் விதித்தனர்.
மேலும், பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து இந்த உணவகத்திற்கு ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




