Close
ஆகஸ்ட் 4, 2026 9:13 மணி

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப் பட்டது கண்டித்து வாடிப்பட்டியில் தி.மு.க.வினர் மறியல் போராட்டம்

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பாக தி.மு.க சார்பில் கண்டன சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டம் முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. பேரூர் அவைத்தலைவர் திரவியம், பேரூர் துணைச் செயலாளர் கண்ணன், முன்னாள் கவுன்சிலர் பாலசுப்ரமணியன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் நாச்சிகுளம் பாஸ்கரன், சிதம்பரம் பன்னீர் செல்வம், முரளி, அரவிந்தன், ராம் மோகன், ராஜசேகரன், ஆறுமுகம், மருது பாண்டியன், பாலமுருகன், கொரியர் சிவா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தி.மு.க தொண்டர்கள் இதில் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் த.வெ.க அரசைக் கண்டித்தும், உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து நிலையப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது அங்கு அசம்பாவிதங்களைத் தடுக்க பாதுகாப்புப் பணியில் தயாராக இருந்த சமயநல்லூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் தலைமையில், காவல் ஆய்வாளர் கோபி, உதவி ஆய்வாளர் திவ்யா மற்றும் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.கவினரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். கைது செய்யப்பட்ட 100 பேரையும் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் கொண்டு சென்று அடைத்தனர்.

இச்சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top