Close
ஜூன் 4, 2026 11:20 மணி

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் நாளை முதல் பேருந்துகள் வந்து செல்லும்: கலெக்டர் அறிவிப்பு

கலெக்டர் மதுபாலன்

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் நாளை முதல் பேருந்துகள் வந்துசெல்லும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது; நாமக்கல் மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதியில், பயணிகள் நின்று பேருந்துகளில் ஏறுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதை தவிர்க்கும் வகையில், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, மெயின் ரோட்டில், பழைய பேருந்து நிலையம் வழியாக, திருச்சி, துறையூர், மோகனூர் மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளுக்கு செல்லும் புறநகர் பேருந்துகள் அனைத்தும், நாளை 5ம் தேதி முதல், பழைய பேருந்து நிலையத்திற்குள் சென்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு வெளியே செல்லும்.

எனவே, பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, திருச்சி, துறையூர், மோகனூர் மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அனைவரும் பழைய பேருந்து நிலையத்தின் உட்புறம் இருந்து பேருந்துகளில் ஏறி பயணம் செய்ய வேண்டும்.

மேலும், இரவு நேரங்களில் சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு, பார்க் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் நாளை 5ம் தேதி முதல் பழைய பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top