Close
ஆகஸ்ட் 2, 2026 9:13 மணி

அண்ணாமலையார் கோவில் மாட வீதியில் “ஓம்” படத்தின் படப்பிடிப்பு: தனுஷை காண குவிந்த ரசிகர்கள்

தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது. அங்கு நடிகர் தனுஷை நேரில் காணவும், அவரது படப்பிடிப்புச் காட்சிகளைப் பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் அண்ணாமலையார் கோவில் மாட வீதியில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் ஓம் திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது. நடிகர் தனுஷின் 55 ஆவது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இவர் ‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ஆவார்.

ஓம் என பெயரிட்டுள்ள இந்தப் படத்தைத் தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டி, பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாவும் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான ‘ஓம்’ படத்தின் டைட்டில் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும், இப்படத்தின் தீம் மியூசிக்கை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வெளியிட்டுள்ளார். இந்த தீம் மியூசிக் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.

தனுஷின் பிறந்தநாளையொட்டி ‘ஓம்’ படத்தின்‘அலாக்கா லோவா’ என பெயரிடப்பட்ட முதல் பாடல் வெளியானது. இப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில், இடம்பெற்ற தனுஷின் நடனமும் நடிகர் மம்மூட்டியின் தோற்றமும் ரசிக்க வைத்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக திருவண்ணாமலை சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வருகிறது. ‘ஓம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புற மாடவீதியில் தீவிரமாக நடைபெற்று வந்தது. அங்கு நடிகர் தனுஷை நேரில் காணவும், அவரது படப்பிடிப்புச் காட்சிகளைப் பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இன்று விடுமுறை தினம் என்பதால் அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அந்த வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பின்பு காவல்துறை\யினர் போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top