Close
ஆகஸ்ட் 2, 2026 9:13 மணி

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா மற்றும் சுற்றுலா விழா துவக்கம்

கொல்லிமலையில் நடைபெற்று வரும் ஓரி விழாவில், மாநில வில்வித்தைப் போட்டியை, சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகர் துவக்கி வைத்தார்.

கொல்லிமலையில் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா துவங்கியது. 60,000 மலர்களால் தத்ரூபமாக வடிவமைத்த உருவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், கொல்லிமலையில், வல்வில்ஓரி விழா, தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு ஆக. 2, 3 தேதிகளில் ஓரி விழா நடைபெறுகிறது. முன்னதாக கலைமாமணி பிரபுவேனுகோபாலின் மங்கள இசை நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற துவக்க விழாவிற்கு ஆர்.டி.ஓ., சாந்தி தலைமை வகித்தார். சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., சந்திரசேகர், வல்வில்ஓரி படத்திற்கு மாலை அணிவித்து விழாவை துவக்கி வைத்தார்.

முன்னதாக, தாவரவியல் பூங்காவில், தோட்டக்கலை துறை மூலம் அமைக்கப்பட்டிருந்த மலர் கண்காட்சியை, எம்.எல்.ஏ., சந்திரசேகர் திறந்து வைத்து பார்வையிட்டார். 60,000 மலர்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட உருவங்களை பொதுமக்களும் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

இதே போல், காய்கறிகளை கொண்டு டிராகன், கழுகு மற்றும் முதலை உருவங்களும் சிறப்பாக அமைப்பட்டிருந்தன. தொடர்ந்து, கொல்லிமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியை எம்எல்ஏ சந்திரசேகர் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, 18 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாளை தொடர்ந்து 2ம் நாள் விழா மற்றும் நிறைவு விழா நடைபெற உள்ளது. மாவட்ட சுற்றுலா அலுவலர் காமில் அன்சர், மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top