இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் ஸ்தாபகர் தினவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு இலஞ்சி கல்விச்சங்க தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார்.
செயலாளர் சண்முகவேலாயுதம் முன்னிலை வகித்தார். பள்ளியின் ஸ்தாபகர்களான அகிலாண்டம் பிள்ளை, இராமசுவாமி பிள்ளை ஆகியோரின் திரு உருவச் சிலைக்கு பரம்பரை உறுப்பினர் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
தலைமை ஆசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். பள்ளியின் முன்னாள் மாணவரும் தென்காசி அகாஸ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகடமியின் நிறுவனரும் மூத்த ஆசிரியருமான ஆகாஸ மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி மாணவர்கள் எதிர்கால வாழ்வில் வெற்றி பெற ஊக்க உரையாற்றி
தன் பள்ளிநாட்களில் ஆசிரியர்கள் கண்டித்து கற்பித்ததன் விளைவாகவே தான் இந்த நிலையை அடைந்ததாக தனது பள்ளி பருவ அனுபவங்களை பகிர்ந்து ஸ்தாபகர்களுக்கும் தனது முன்னாள் ஆசிரியர்களுக்கும் நன்றி பாராட்டினார்.
நிகழ்ச்சியை தமிழாசிரியர் ஐயப்பன் தொகுத்து வழங்கினார். ஓவிய ஆசிரியர் கணேசன் ஆசிரியர்கள் வெளியப்பன், மாரியப்பன், என் சி சி அலுவலர் செந்தில்பாபு உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.பொதுக்குழு உறுப்பினர் இராமசாமி விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
முன்னதாக பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஜெயபாபு, ஜெயபாலன், ஜெயம் இசைக் குழுவினரின் கிளாரிநெட் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இசையாசிரியர் கிருஷ்ணம்மாள் வழிகாட்டுதலில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
உதவித்தலைமை ஆசிரியர் சித்திர சபாபதி நன்றி கூறினார். விழாவில் திரளான மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.




