Close
ஏப்ரல் 24, 2026 3:57 காலை

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கு நாளை வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் நாளை துவங்குகிறது. 4 நாட்கள் மட்டுமே வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர்  துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் நாளை 30ம் தேதி துவங்குகிறது.

31ம் தேதி மற்றும் ஏப். 1ம் தேதி அரசு விடுமுறை நாட்கள். மீண்டும் ஏப். 3ம் தேதி மற்றும் 5ம் தேதி ஆகிய 2 நாட்கள் விடுமுறை நாட்கள். 6ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாள்.

எனவே மார்ச் 30, ஏப். 2, 4 மற்றும் 6 ஆகிய 4 நாட்கள் மட்டுமே வேட்புமனுக்களை தாக்ல் செய்ய முடியும். ஏப். 7ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 9ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாளாகும் அன்று மாலை வேட்பாளர் இறுதிப்பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்படும்.

வேட்பு மனுக்களை காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள்ளாக, வேட்பாளரின் 3 வாகனங்கள் நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு உள்ளே வர அனுமதிக்கப்படுவார்கள்.

வேட்புமனு தாக்கல் செய்யும்போது டெபாசிட்டாக பொது பிரிவினருக்கு ரூ. 10,000, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ.5000 செலுத்த வேண்டும். டெபாசிட்டை செக், டிராப்ட் மூலம் செலுத்த அனுமதி இல்லை.

வேட்புமனு தாக்கல் செய்யவரும் அனைத்து தரப்பு வேட்பாளர்களும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top