மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் உள்ள ஏஎம்எம் கவுண்டர் பள்ளி வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலை அமைந்துள்ளது.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 221 வது நினைவு தினத்தை ஒட்டி அவரது திருஉருவ சிலைக்கு திமுக சார்பாக, மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் வணிகவரித்துறை மற்றும் பத்திரபதிவுத்துறை முன்னாள் அமைச்சர் மூர்த்தி , சோழவந்தான் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம். எல். ஏ. வெங்கடேசன் ஆகியோர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
இதில் , திமுக ஒன்றியச் செயலாளர்கள் தனராஜ், அருண்குமார், விஜயன், நகர செயலாளர் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், மற்றும் ஒன்றிய துணைச் செயலாளர் கார்த்திக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனுஷ்கோடி, இளைஞரணி சந்தன கருப்பு, தண்டலை சதீஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




